கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மப்பேடு ஊராட்சியில் தெருமுனை பிரசாரக் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் மப்பேடு ஊராட்சியில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ரமேஷ் இதில் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் கோபால், ரவி, கீதா முனுசாமி, தேவா, முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜ், சண்முகம், மனோஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் தலைமைப் பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினின் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் திராவிடபக்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆதிசேஷன், ஒன்றியச் செயலாளர் கூளூர் ராஜேந்திரன், பொன்.பாண்டியன், ஜெயவேல், ஆறுமுகம், டேனியல், தினேஷ், சரத்குமார், கார்த்திக், நீலாவதி ராஜேந்திரன், சாரதி, தயாளன், முரளி, செந்தில், சபஸ்டின், ஸ்ரீதர், புருஷோத்தமன், ரத்தினவேல், மேகநாதன், தேவேந்திரன், முருகேசன், விநாயகம், லூயிஸ் மத்தியாஸ், குபேரன், சகாயம், ஆல்பர்ட், மதன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மப்பேடு ஊராட்சியில் தெருமுனை பிரசாரக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: