இந்தியா வேகமெடுக்கும் கொரோனா பரவல்!: டெல்லிக்கு தேவையான தடுப்பூசிகள் இதுவரை கிடைக்கவில்லை..அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!! Apr 30, 2021 தில்லி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி: டெல்லியில் நாளை செலுத்தப்பட உள்ள கொரோனா தடுப்பூசிகள் இதுவரை வந்துசேரவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா 2ம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது வடமாநிலங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். குறிப்பாக டெல்லியில் கொரோனாவின் தாக்கம் உச்சமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில், டெல்லிக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இதுவரை கிடைக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை டெல்லிக்கு தேவையான மருந்துகள் கிடைக்கவில்லை என்று என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மருந்து நிறுவனங்களிடம் பேசி வருவதாகவும் விரைவில் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார். மேலும் அடுத்த 3 மாதத்திற்குள் டெல்லியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் அனைவருக்கும் மருந்து நிச்சயம் கிடைக்கும் என்றும் உறுதிபட கூறியுள்ளார். இதனிடையே டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. அதேபோல் பீகார் தலைமை செயலாளர் அருண்குமார் சிங்கிற்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
இ-பாஸ் முறைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
பாலியல் வழக்கில் சிக்கியதால் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐக்கு கர்நாடக போலீஸ் கடிதம்
பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல், ரேவண்ணாவுக்கு எதிராக 2-வது லுக் அவுட் நோட்டீஸ்: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தகவல்
கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய அரசு காப்பாற்றுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
ஆபாச வீடியோ விவகாரம் : பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல், தந்தை ரேவண்ணாவுக்கு எதிராக 2-வது லுக் அவுட் நோட்டீஸ்
தேவகவுடா பேரன் பிரஜ்வலின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம்
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்