அண்ணாநகர்: சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (60). இவரது மகன் ஆறுமுகம் (38). இவருக்கு மனைவி மற்றும் 12 வயதில் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 25-ம் தேதி இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு கிளம்பி சென்றனர். அப்போது, வீட்டில் பாட்டி சாந்தியுடன் 12 வயது சிறுமி தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நீண்ட நேரம் காணவில்லை என்பதால், கோயம்பேடு போலீசில் பாட்டி சாந்தி புகார் அளித்தார். இதற்கிடையே நேற்றிரவு பேத்தியை தேடியபோது, அங்குள்ள 17 வயது சிறுவனின் வீட்டிலிருந்து அழுதபடி வெளியே வருவதை கண்டு சாந்தி அதிர்ச்சியானார்.