இந்தியா பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்!: புதுவை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடக்கம்..!! Apr 30, 2021 Puduvai புதுச்சேரி: புதுச்சேரியில் 1 கோடி ரூபாய் செலவில் நிமிடத்திற்கு 700 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1 நிமிடத்திற்கு 700 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், அரசு மருத்துவமனைக்கு மட்டும் பயன்படுத்தபடும் என்றும் தேவைக்கேற்ப ஆக்சிஜன் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். புதுவை அரசு மருத்துவமனையில் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலையே இனி வராது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டெல்லியில் இருந்து மருத்துவ பொருட்களை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு இன்று காலை 2 லாரிகள் வந்தன. ஆனால் பல்வேறு காரணங்கள் கூறி மருத்துவ பொருட்களை கீழே இறக்காமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர்.
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்
விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு!: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்..!!
10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய பேச்சு மேடையில் ஒலிபரப்பு.. இத்தனை பொய்களை பேசலாமா?: மோடிக்கு தேஜஸ்வி யாதவ் கேள்வி..!!
தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி ஐகோர்ட்
ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.. துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி மோதல்
வாக்குப்பதிவு இயந்திரங்கள்,வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் சின்னங்களை சேமிப்பது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: தேர்தல் ஆணையம் வெளியீடு
திருவனந்தபுரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; 6 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை: இரும்பு சங்கிலியால் கட்டிப்போட சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவு