டெல்லி: டெல்லியில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். டெல்லியின் பிஜ்வாசன் பகுதியில் வால்மீகி காலனியில் இன்று மதியம் மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மின்சார கோளாறால் ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென அருகில் உள்ள குடிசைகளுக்குப் பரவியதால், வீட்டில் உள்ள சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு நான்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்தன.