சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 17 நாட்களில் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணியாமல் சுற்றிவந்ததாக 5.83 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு ெசய்து அபராதமாக போலீசார் ₹11.64 கோடி வசூலித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது தமிழகம் காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறது.