குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மற்ற மாநிலங்களுக்கும் வழங்கப்படும்: அமித்ஷா பேட்டி.!!!

காந்திநகர்: குஜராத் மாநிலம் கொல்வாடா கிராமத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமித்ஷா, பி.எம் கேர் நிதியிலிருந்து ஆக்ஸிஜனை வழங்க நாடு முழுவதும் சிறப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக குஜராத்தில் 11 புதிய பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் கூடுதல் ஆக்சிஜன் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

Related Stories: