சென்னை : பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்ளக்கூடாது. பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவதில்லை. தமிழகம் சவாலான காலகட்டத்தில் உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றமடைய கூடாது. ஆக்கப்பூர்வமாக சிந்தித்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். சென்னையில் 12 ஸ்கிரீனிங் சென்டர் உள்ளது .அங்கு பொதுமக்கள் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் கண்காணிப்பு மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ” என்றார்.