அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (58). இவரது மகன் சாந்தகுமார் (32), மகள்கள் தனலட்சுமி (25), மோகனா தேவி (40), மலர்கொடி (30), மருமகன் ரவி (35). இவர்கள் அனைவரும் கூட்டாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், இந்த ஏலச்சீட்டில் சேர்ந்து மாதம் ரூ.2000 கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ஏலச்சீட்டு தொகை ரூ.47 லட்சத்துடன் 6 பேரும் மாயமாகினர். பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து அண்ணாநகர் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேஸ்வரி, அவரது மருமகன் ரவி ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.