புழல்: சென்னை வியாசர்பாடியை அடுத்த கொடுங்கையூரை சேர்ந்தவர் அரவிந்தன் (26). இவர் மாதவரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் வங்கியின் கீழ் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தபோது, இருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது. அவர்களை பிடிக்க மாதவரம் உதவி கமிஷனர் அருள் சந்தோஷ் முத்து உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.