சின்னாளபட்டி : ஆத்தூர் மாலப்பட்டியில் குழாய்கள் உடைப்பால் குடிநீர் வீணாக வெளியேறி கழிவுநீரில் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.ஆத்தூர் ஊராட்சி மாலப்பட்டியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரகாலமாக தண்ணீர் அதிகளவில் வெளியேறி கழிவுநீரில் கலந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தனர்.