பெங்களூரு: கொரோனா பரிசோதனையை 10 ஆயிரம் வரை உயர்த்த வேண்டும் என்று துணை முதல்வர் அஷ்வத்நாராயண் தெரிவித்தார். பெங்களூரு மேற்கு மண்டல மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பது தொடர்பாக துணை முதல்வர் அஷ்வத்நாராயண் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல் கொரோனா பரிசோதனையை 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.