திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இம்மாத இறுதியில் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக பூரம் திருவிழாவுக்கு வெளிநாடுகள் உட்பட பல இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் திரள்வது வழக்கம். ஆனால் ெசன்ற ஆண்டு கொரோனா காரணமாக திருச்சூர் பூரம் திருவிழா நடத்தப்பட வில்லை. இந்த நிலையில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து கட்டுப்பாடுகளுடன் இந்த ஆண்டு திருச்சூர் பூரம் விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டது.தற்போது கொரோனா அதிகரித்துள்ள நிலையில், பூரம் திருவிழாவை நடத்தினால் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என்று திருச்சூர் மாவட்ட மருத்துவ அதிகாரி ரீனா தெரிவித்துள்ளார்.