திருமலை: தெலங்கானாவில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வேலி அமைக்க சென்ற அதிகாரிகளை கிராமமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. தெலங்கானா மாநிலம், பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம், தும்முகுடம் மண்டலம், கோட்டூர் அருகே உள்ள சிந்தகுப்பா கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் வேலி அமைக்க வனத்துறை அதிகாரிகள் நேற்று காலை சென்றனர். அப்போது, கிராமமக்கள் ‘‘நாங்கள் காலம் காலமாக இங்கு விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலத்தில் நீங்கள் எப்படி வேலி அமைப்பீர்கள்’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.