பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் 20வயது மதிக்கத்தக்க மக்னா யானை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் வறட்சி நிலவும் போது, அங்கிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி, யானைகள் கூட்டமாக ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன. ஒகேனக்கல் வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக பிரிந்து, உணவு தேடி வனப்பகுதியில் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட சின்னாறு முத்தூர்பட்டி பகுதியில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் ஒரு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.