வேதாரண்யம்: வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல் வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மழைக்காலம் முடிந்தவுடன் கடந்த பிப்ரவரி மாதம் உப்பு பாத்திகள் சரி செய்யப்பட்டு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது . கடந்த 15 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.