சின்னாளபட்டி: ஆத்தூர் மல்லையாபுரம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கடமானை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு காட்டில் விட்டனர். ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லையாபுரம் - நெலப்பாறைப்பகுதியில் புலிப்பாண்டிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்ததோட்டத்தில் தண்ணீர் தேவைக்காக 12 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியை கட்டியுள்ளார். இத்தொட்டியில் வனவிலங்குகள் விரட்டியதில் தப்பி வந்த 135 கிலோ எடை உள்ள கடமான் தவறி விழுந்துவிட்டது.