தூய்மை பணியாளருக்கு சரமாரி கத்திக்குத்து

தாம்பரம்: குரோம்பேட்டை நாகல்கேணியை சேர்ந்தவர் கோட்டையா (45). பல்லாவரம் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடன் ஆதிகேசவன் (45) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்கள் நேற்று காலை குரோம்பேட்டை நியூ காலனியில் குப்பையை சுத்தம் செய்தபோது, திடீரென இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ஆதிகேசவன், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால், கோட்டையாவின் முதுகில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். பலத்த காயமடைந்த கோட்டையாவை சக ஊழியர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிகேசவனை தேடி வருகின்றனர்.

Related Stories: