அறந்தாங்கி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தல்: 3 பேர் கைது கார் பறிமுதல்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மீமிசல் போலீசார் மீமிசல் ஏம்பக்கோட்டை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியபோது, காருக்குள் 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் கட்டப்பட்டு இருந்ததும், மீமிசல் பகுதியில் ரேஷன் அரிசியை வாங்கிக்கொண்டு கோழிப்பண்ணைகளுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து திருமயம் அருகே உள்ள போசம்பட்டியைச் சேர்ந்த தென்னரசு (33), தென்னரசு(33), மாங்குடி(22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: