புதுடெல்லி: மியான்மரில் மதரீதியிலான துன்புறுத்தல்களால் அங்கிருந்து வெளியேறி இந்தியா வந்துள்ள ரோகிங்கியா முஸ்லிம் அகதிகள் பலர் ஜம்முவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் ஜம்முவில் இருந்த ரோகிங்கியா அகதிகள் முகாமில், போலீசாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்திய குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் மீண்டும் மியான்மருக்கு நாடு கடத்தப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது.