சென்னை: சென்னை நெற்குன்றத்தில் தந்தை கண் முன்னே மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரம்மதேவன் என்பவரின் மகன் நாராயணனே வெட்டி கொலைசெய்யப்பட்டவர் ஆவார். 23 வயதான நாராயணன், பாலிடெக்னீக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இதையடுத்து, தனது தம்பியின் பிறந்தநாளை கொண்டாட அண்மையில் சென்னை வந்த நாராயணன் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு சாலை ஓரமாக நடந்து சென்றார். அப்போது ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் தந்தை கண் முன்னே நாராயணனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றது.