புதுடெல்லி: ‘‘பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் தேர்வு பயத்தை உண்டாக்காதீர்கள். வெளி அழுத்தம் இல்லாவிட்டாலே மாணவர்களின் நம்பிக்கை பெருமளவு அதிகரிக்கும்’’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். தேர்வு பயத்தை போக்கும் முயற்சியாக மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் ‘பரிக்ஷாபி சர்ஷா’ நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதில் பிரதமர் மோடி வழங்கிய அறிவுரைகள்: தேர்வுகளை பார்த்து மாணவர்கள் பயப்படக் கூடாது. அவை தங்களை மேம்படுத்துவதற்கான ஒரு சோதனையாக மட்டுமே பார்க்க வேண்டும். வெளிப்புற அழுத்தங்கள் இல்லாவிட்டாலே, மாணவர்கள் தேர்வு பயமின்றி அவர்களின் நம்பிக்கை மேம்படும்.