தேர்தல் விதிகளை மீறி வாக்குச்சாவடி மையம் அருகே ஒட்டப்பட்ட அதிமுக போஸ்டர்

புழல்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் சுதர்சனம் நேற்று காலை மாதவரம்- மந்தைவெளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதுபோல், தொகுதியின் அதிமுக வேட்பாளர் மாதவரம் வி.மூர்த்தி, மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.  வாக்களித்து விட்டு வெளியே வந்த திமுக வேட்பாளர் மாதவரம் சுதர்சனம் கூறுகையில், ‘‘ஓட்டு போட வந்்தவர்களுக்கு வாக்காளர் சீட்டு முறையாக வழங்கப்படவில்லை. வாக்குச்சாவடி மையம் குறித்து அறிவிப்பும்  தகவல் பலகையில் இல்லை. வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் அதிமுக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை தேர்தல் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை’ என்றார். இதனிடையே, சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள்  அங்கு வந்து அதிமுகவினர் ஒட்டிய அந்த போஸ்டர்களை உடனடியாக அகற்றினர்.

Related Stories: