புதுடெல்லி: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து, அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநில உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் பதவி வகித்தார். இதற்கிடையே, தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் கார் சிக்கிய விவகாரத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு எழுதிய கடிதத்தில், ‘ரெஸ்டாரன்ட், பார்களில் இருந்து ரூ.100 கோடி வசூலித்து தருமாறு போலீசாரை அமைச்சர் தேஷ்முக் கட்டாயப்படுத்தினார்’ என குற்றம்சாட்டினார்.