கிணத்துக்கடவு: கோவை கிணத்துக்கடவு அடுத்த சென்றாம்பாளையம் பிரிவிலிருந்து சென்றாம்பாளையம் செல்லும் சாலையில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான மஞ்சி மில் இயங்கி வருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்டோர் வேலை
பார்த்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மஞ்சிமில்லுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் மஞ்சி மில்லில் இருந்து பயங்கர புகை வருவதை பார்த்த, அக்கம் பக்கத்தினர் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் தீ மளமளவென கொட்டி வைக்கப்பட்டிருந்த மஞ்சி முழுவதும் பரவியது.