ஜோசப் சாமுவேலை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

அம்பத்தூர்: அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு பாடியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுகவிற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு போடும் ஓட்டு ஆகும். சேப்பாக்கம் தொகுதியில் எனது வெற்றியைவிட அம்பத்தூர் தொகுதி வெற்றி தான் எனக்கு முக்கியம். அதனால் தான் இங்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக நமது வேட்பாளர் ஜோசப் சாமுவேல் தான் மருத்துவமனையில் படுத்து கொண்டு ஜெயிக்கப்போகிறார். எனவே, அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்றார்.

பிரசாரத்தின் போது, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் பகுதி செயலாளர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், எம்.டி.ஆர்.நாகராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் எல்.பி.எப். மோகன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் சாந்தகுமாரி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பீர்முகம்மது, மோகனரங்கன், லோகபிரான், ரோமியோ, மோகன்குமார், மாரியப்பன், துரைசாமி, முருகன், பால்சாமி, லெனின்சுந்தர், கவுரிசங்கர், இப்ராஹிம், தாமோதரன், ஜஸ்டின், கார்வின், திமுக வட்ட செயலாளர்கள் எம்.இ.சேகர், பிரகாஷ், டிக்கா, சீனிவாசன், லோகநாதன், நெப்போலியன், சுந்தர்ராஜ், விஜயகுமார், சண்முகம், லால், கமல், கண்ணபிரான், நவராஜ்ரவி, ரகு, ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசை ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: