அசாமில் உருவான புதிய அரசியல் சக்தி பிரமோத் போரா

இந்த தேர்தலில் அதிகம் கவனிக்க வைத்த இளம் தலைவராக உருவெடுத்துள்ளார் பிரமோத் போரா. போடோலாந்து பிராந்தியத்தில் மொகிலரியை எதிர்த்து அரசியல் செய்வது எளிதான காரியமல்ல. 17 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மொகிலரியை, தனது வியூகங்களால் வெற்றி கொண்டு சமீபத்தில் போடோ கவுன்சிலின் தலைவர் பதவியை கைப்பற்றினார். போராவின் வளர்ச்சியைக் கண்ட பாஜ, அவரை சாமர்த்தியமாக தனது கூட்டணிக்குள் இணைத்துக் கொண்டது.

போடோலாந்து மக்கள் முன்னணியையும் இதனாலேயே. பாஜ தைரியமாக கழற்றி விட்டது. இந்த தேர்தலில் பிரசாரத்தை அவர் கையாண்ட விதமும் பல தரப்பிலும் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. அசாமில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும்பட்சத்தில் இம்மாநில அரசியலில் பிரமோத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

Related Stories: