புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் என்ற பெயரை மட்டுமே வைத்துக் கொண்டுள்ள ரங்கசாமி, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காத பாஜ தலைமை மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இதை, மறைமுகமாக பிரசாரத்தில் காட்டி விட்டார். தனது கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே அவர் பிரசாரம் செய்தார். காரைக்கால் பிராந்தியத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடும் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்களை இருதினங்களுக்கு முன் அவர் பிரசாரம் செய்தார். அப்போது, திருநள்ளாறு சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.