உயரதிகாரிகள் டார்ச்சரா? மதுரையில் சென்னை போலீஸ்காரர் தற்கொலை

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம்  அருகே உள்ள முங்குபட்டியை சேர்ந்த முருகன் மகன் அருண்பாண்டியன்(25). இவர், சென்னையில் பட்டாலியன் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். 3 மாத மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றவர், கடந்த சில நாட்களாக மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும், போலீஸ்காரரான தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்தார்.  நேற்று முன்தினம் இரவு, இவரது சகோதரர் தேர்தல் பணிக்காக சென்று விட்டதாக கூறப்படுகிறது. நேற்று பகல் ஒரு மணி அளவில், போலீஸ்காரர் அருண்பாண்டியன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

தகவலறிந்து தல்லாகுளம் போலீசார் சென்று, அருண்பாண்டியன் உடலை மீட்டு, விசாரணை நடத்தினர்.  விசாரணையில், 3 மாத மருத்துவ விடுப்பில் வந்த இவரை, ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், உடனடியாக பணிக்குத் திரும்பும்படி அதிகாரிகள் ‘‘மெசேஜ்’’ அனுப்பியதாகவும், அதிலிருந்தே விரக்தியுடன் காணப்பட்ட அருண்பாண்டியன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

Related Stories: