நிறைவேற்ற முடியும் என்றுதான் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும் என்பதை கருத்தில் கொண்டு தான் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் வரை அடகுவைத்து பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். எனவே, தேர்தல் நேரத்தில், மக்களுக்கு அளிக்கின்ற அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும் என்பதால், வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு உங்களின் ஆதரவை அளிக்க வேண்டுகிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories: