சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது, அவர் பேசியதாவது: நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளில் சிறந்த முறையில் சீர்திருத்தங்களை செய்ததற்காக கிரிசில் விருது, மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியமைக்காக தேசிய விருது, இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையாற்றியதற்கு ஸ்காச் விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளேன். மழைக்காலத்தில் மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளில் ஒரே நாளில் 155 மருத்துவமுகாம்கள் நடத்தி 60,478 நபர்கள் பயன்பெற்றமைக்காக லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை மாநகராட்சி முதல் முறையாக இடம் பெற்றது.