இ.கோமதி,முதலியார்குப்பம் (செய்யூர் தொகுதி) கிராமங்கள் நிறைந்த செய்யூர் தொகுதியில் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் கடிப்பதால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்காக செய்யூர் மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஆனால், அங்கு விஷ ஜந்து கடிகளுக்கு பெரிய அளவில் சிகிச்சை தர எந்த வசதியும் இல்லை. இதனால், செய்யூர் மருத்துவமனை டாக்டர்களே பாதிக்கப்பட்ட நோயாளிகளை செங்கல்பட்டு மருத்துவமனை கொண்டு செல்ல சொல்கின்றனர். ஆனால், இங்கிருந்து செங்கல்பட்டு செல்வதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இதனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பலர் உயிரிழந்து விடுகின்றனர். இதே போன்று விபத்துக்கள், மகப்பேறு போன்ற சிகிச்சைகளுக்கு ஸ்கேன் எடுப்பதற்கு எந்த வசதியும் செய்யூர் மருத்துவமனையில் இல்லை. சாதாரண காய்ச்சலுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனை உள்ளது.