சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர விழிப்புணர்வு செய்து வருகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வருகிற 4, 5-ந் தேதி ஆகிய 2 நாட்களும் பொதுமக்கள் வசதிக்காக பண்டிகைகாலம் போல் கோயம்பேடு, மாதவரம் பஸ் நிலையம், கே.கே நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தம் , தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய 6இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.