தமிழகத்தில் புதிதாக 2,817 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு 19 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் நேற்று 85,331 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 2,817 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், 8,89,490 பேர் தமிழகம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 1,634 பேர் குணமடைந்தனர். இதுவரை 8,59,709 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,738 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,043 ஆக உள்ளது.

Related Stories: