அம்பத்தூர்: அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும், அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளருமான ஜோசப் சாமுவேலை ஆதரித்து திமுக பொருளாளரும், பெரும்புதூர் தொகுதி எம்.பியுமான டி.ஆர்.பாலு அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 89வது வார்டில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக வாக்குசேகரித்தார். அப்போது, டி.ஆர்.பாலு எம்.பி பேசியதாவது, “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அம்பத்தூர் தொகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீடுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கொரோனா நிவாரண தொகையாக, ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைக்கும் தலா ₹4 ஆயிரம் வழங்கப்படும். எனவே, நீங்கள் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு வாக்களிக்க வேண்டும்,” இவ்வாறு அவர் பேசினார்.