துபாய் விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது

சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் சிறப்பு விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த முகமது செகில்(28) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனையிட்டனர்.

 

அப்போது, அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ₹28.26 லட்சம் மதிப்புடைய 621 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: