திருவனந்தபுரம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 2 நாள் தேர்தல் பிரசார பயணமாக நேற்று முன்தினம் கேரளா வந்தார். ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் தொகுதி வேட்பாளர் அரிதா பாபுவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது திடீரென அரிதாவிடம், ‘வீட்டிற்கு எவ்வளவு தூரம்?’ என்று பிரியங்கா கேட்டார். அவரும், ‘2 கிமீ தூரத்தில் உள்ளது,’ என்றார். உடனே, வாகனத்தை அரிதாவின் வீட்டுக்கு திருப்பும்படி பிரியங்கா உத்தரவிட்டார். அரிதாவின் வீட்டுக்கு பிரியங்கா சென்றபோது, வீடு பூட்டப்பட்டு இருந்தது. அரிதாவின்பெற்றோருக்கு பிரியங்கா காத்திருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதும், பதறியடித்து கொண்டு வந்தனர்.