சென்னை: தமிழகத்தில் ஏப்.30-ம் தேதி வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்வதேச விமானங்களுக்கான தடை தொடரும் எனவும் கூறியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறியுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.