தமிழகத்தை அக்னி நட்சத்திரமாக சுட்டெரிக்கும் கொரோனா; கட்டுபாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஏப்.30-ம் தேதி வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்வதேச  விமானங்களுக்கான தடை தொடரும் எனவும் கூறியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறியுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

இதன் காரணமாகக் கடந்தாண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும்கூட, மாதம்தோறும் ஊரடங்கு என்பது தொடர்ந்து நீட்டிக்கப்படு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கு மேலும் ஒரு மாதம், அதாவது ஏப். 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

Related Stories: