சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.ேவலுவை ஆதரித்து பல்லக்கு மாநகர் பகுதியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: அதமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் சாலை ஏதும் போடப்படவில்லை. எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார். அதில்தான் கொள்ளையடிக்க முடியும். அடிக்கல் நாயகன் பழனிசாமி, செங்கலை மட்டுமே எடுத்து வைப்பார், அடுத்து எதுவும் செய்வதில்லை. தமிழகத்தை டெல்லியில் அடகு வைத்து விட்டனர். நம் வீட்டு பிள்ளைகள் படிக்க கூடாது என்று நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். தற்போது, புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரப்போகிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்காது.