சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஜோதிராமலிங்கம் நகரில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கங்கையம்மன் கோயில் தெருவில் தொடங்கி முத்தமிழ் நகர், கங்கையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்த தொகுதியில் நான் அறிமுகப்படுத்தி, செயல்படுத்திய சமூகநலத் திட்டங்கள், பசுமை சைதை, கலைஞர் கணினி மையம், பிளஸ் 2 வகுப்பில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் மேற்படிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது, மாநில அளவில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது,