தாம்பரம்: தாம்பரம் தொகுதி அமமுக வேட்பாளர் கரிகாலன் நேற்று தாம்பரம் கடப்பேரி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது பொதுமக்களிடம் அவர் பேசுகையில், ‘தாம்பரம் பகுதியில் தான் நகர மன்ற தலைவராக இருந்தபோது பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்துள்ளேன். அந்த பணிகளை தொகுதி முழுவதும் செய்திட குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றிபெற செய்ய வேண்டும்,’ என்றார். பிரசாரத்திற்கு இடையே மதியம் வேட்பாளர் கரிகாலன் மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனைக்கு சென்று, அங்கு தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டார்.