தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், நேற்று ராயபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். வழியில் ஒரு கடையில் டிபன் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பிரசாரத்தை தொடங்கி, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், ‘மீனவர்கள் நலனை கருத்திகொண்டு ரூ.100 கோடிக்கு மேல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு வசதி செய்து கொடுத்துள்ளேன். மீன் விற்பனை செய்பவர்கள் மழையிலும் வெயிலிலும் கஷ்டப்பட்டதால் சமீபத்தில் மீன்பிடி துறைமுகத்தில் சர்வதேச தரத்தில் மீன் மார்க்கெட் கட்டிக்கொடுத்துள்ளேன். தற்போது ரூ.155 கோடி செலவில் மீன்பிடி துறை முகத்தில் பல்வேறு வசதி செய்து கொடுப்பதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது.