சென்னை: தண்டையார்பேட்டையில் உள்ள ஏழுகிணறு பகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தேர்தல் பிரசாரம் செய்தார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் சவுகார்பேட்டை ஏழுகிணறு பகுதியில் நேற்று காலை நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு பேசியதாவது: ‘‘தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசு அடிமை அரசாக இருந்து வருகிறது. மோடி, அமித்ஷாவுக்கு அடிமையாக செயல்படுகின்றனர். ஏப்ரல் 6ம்தேதி நடைபெறும் தேர்தல் மிக முக்கியமானது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடியது.