சென்னை: இந்திய வங்கிகள் சங்கத்தின் 11வது ஊதிய ஒப்பந்தத்தை லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் அமல்படுத்தும்படி, டிபிஎஸ் வங்கிக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களுக்கு அவர்கள் பெற்று வந்த ஊதியத்தையே வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.