சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு நேற்று 173வது அ வட்டத்திற்கு உட்பட்ட கிரீன் வேஸ் ரோடு, அன்னை சத்யா நகர், எம்.ஆர்.சி.நகர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, பொதுமக்கள் அவரை உற்சாக வரவேற்று மலர்தூவி, சால்வை அணிவித்து, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வாழ்த்தினர். அதை தொடர்ந்து பூக்கடைகள், காய்கறி மற்றும் மளிகை கடை வைத்திருப்பவர்களிடம் குறைகளை கேட்டும், திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை தெரிவித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, குடும்பம் குடும்பமாக அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.