சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனை, டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்க தலைவர் டி.எம்.என்.தீபக் தலைமையில் அதன் நிர்வாகிகள் 3 ஆயிரம் பேர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது டி.எம்.என்.தீபக் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நடத்திய போராட்டத்தில் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அதனால், நாங்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினோம். கொரோனா காலத்தில் பல்வேறு மாற்றுத்திறனாளி இயக்கங்களுக்கு தலா 25 கிலோ அரிசி, 40 ஆயிரம் மாஸ்க் உள்ளிட்டவற்றை வழங்கினார். எனவே, எங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில், இந்த தேர்தலில் நாங்களே நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்,’ என்றனர்.