சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா நேற்று கலைஞர் நகர் வடக்கு பகுதி 128வது வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட-டிவி ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிகை அலங்கார சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளை வெற்றி பெற்றதும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார். பின்னர், பிரபாகர் ராஜாவை ஆதரித்து மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘விருகம்பாக்கம் தொகுதியில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். திமுகவுக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமருவார்,’ என்றார்.