சென்னை: எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் போட்டியிடுகிறார். இவர் எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு, வேப்பேரி, சேத்துப்பட்டு, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்கள் மற்றும் சாலையில் சென்ற பாதசாரிகளிடம் வாக்கு சேகரித்தார். இதேபோல் நேற்று மாலை நரியங்காடு காவலர் குடியிருப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுப்பு, பதவி உயர்வில் மாற்றம் என திமுக தலைவர் காவலர்களுக்கு, தேர்தல் அறிக்கையில் பல நல திட்டங்கள், கூறியிருப்பதை கூறி வாக்கு சேகரித்தார். இதேபோல், “எழும்பூர் தொகுதி மக்களின் முக்கிய பிரச்னையான குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் பிரச்னை திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் உடனடியாக தீர்க்கப்படும்.