சென்னை: எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார். இவர் கடந்த ஒரு வாரமாக அந்த தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்து வருகிறார். அதன்படி நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் 58வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்தே சென்று மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவர் செல்லும் வழியெங்கும் பெண்கள் உற்சாக வரவேற்று, மலர்தூவி, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.