சின்னம் புராணம் பாடும் புதுச்சேரி வேட்பாளர்கள்

புதுச்சேரியில் கடந்த தேர்தலில் ஒரு சின்னத்தில் போட்டியிட்டவர்களில் பலர் இத்தேர்தலில் வேறு கட்சியில் இணைந்து மாற்று சின்னத்தில் நிற்கின்றனர். இதனால் வாக்காளர்களை வீடு வீடாக சென்று சந்திக்கும்போது, தங்களது சின்னத்தைதான் வாக்காளர் மனதில் பதிய வைப்பதில் முனைப்பு காட்டுகின்றனர்.

தனது கட்சி, சின்னம் பொறித்த துண்டுகளை மக்களின் பார்வைக்கு தெரியும் வகையில் தோளில் போட்டு ஓட்டு கேட்கின்றனர். சுயேட்சைகளாக நிற்பவர்கள் புதிய சின்னத்தில் நிற்கின்றனர். தப்பித்தவறி வாக்காளர்கள் பழக்க தோஷத்தில் அவர்கள் ஏற்கனவே கடந்த தேர்தலில் நின்ற சின்னத்துக்கு வாக்களித்து விட்டால் அதுவே தங்களது தோல்விக்கு காரணமாகி விடும் என்பதால் வேட்பாளர்கள் சின்னம் புராணங்களை அதிகளவில் பாடுவதாக மக்கள் சொல்கின்றனர்.

Related Stories: